பாம்பு கடித்து மாணவி இறந்த நிலையில் முன்பே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமை வெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. பெற்றோரை இழந்த நிலையில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். செங்கல் சூளையில் வேலைபார்க்கும் அத்தையின் அரவணைப்பில் அவர் வளர்ந்து வந்த நிலையில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது பாம்பு கடித்து இறந்து போனார். இந்த நிலையில் சிறுமியை முதியவர் வன்கொடுமை செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதுகுறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பாலுவை (75) கைது செய்தனர். மேலும்,இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த சதீஷ், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர், கண்ணன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வீடியோவை வைத்து 5 பேரும் முதியவரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-பா.ஈ.பரசுராமன்.




