மத்தியப் பிரதேச ஆளுநர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85.
தாண்டன் ஜூன் 11 அன்று சுவாசப்பிரச்சினை காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமமும், காய்ச்சலும் இருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இத்தகவலை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்து உள்ளார்.
தாண்டன் உத்தரபிரதேசத்தில் கல்யாண் சிங் அரசில் அமைச்சராக இருந்தார். பின்னர் பாஜக-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்து உள்ளார்.
தாண்டன் லால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தாண்டன் எனவும், பொது மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் எனவும் பிரதமர் புகழாரம் கூறியுள்ளார்.