புதுடெல்லியில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு 70% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
டெல்லியில், கடந்த மாதங்களில் (லாக்டவுனில்) நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு குறைந்துள்ளது.இந்நிலையில், சர்வதேச அமைப்பின் அறிக்கையின்படி, நகரங்கள் மீண்டும் திறக்கும் வரை இது தற்காலிகமாக தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நைட்ரஜன் ஆக்சைடு காற்றின் தரத்தை குறைக்கின்றன.இது புற்றுநோய் மற்றும் பிற சுவாச நோய்களையும் அதிகரிக்கும் அபாயமுள்ளது.நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது.
மற்ற நாடுகளிலும் நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு குறைந்துள்ளது. சீனாவில் 40 சதவிகிதமும், பெல்ஜியத்தில் 20 சதவிகிதமும், அமெரிக்காவில் 19 முதல் 40 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புடன் வாழ்வோம்!