செய்தி அலை வாசகர்களின் எழுத்து திறனை வெளிக்கொணரும் வகையில் சிறுகதைப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கற்பனை சிறகை விரித்து, சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.
வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ சிறுகதையாக இடமுண்டு. சிறுகதை எழுத ஆர்வமா? எழுத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கான தளம் அமைத்து கொடுக்கிறது, செய்தி அலை. அப்படி உங்களின் கற்பனை குதிரைகளை தட்டிவிட்டு, சிறுகதைகளை எழுதி அனுப்புங்கள்.
விதிமுறைகள் :
- படைப்புகள் உங்கள் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் அல்லது வாழ்வில் நடந்த அனுபவமாக இருக்க வேண்டும்.
- படைப்புகள் அனைத்தும் யூனிகோட் எழுத்துருவில், 4-5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- படைப்புகள் வேறு எங்கும் பிரசுரிக்கப்படவில்லை என உறுதியளித்து, செய்தியலை சிறுகதைப் போட்டி என தலைப்பிட்டு அனுப்ப வேண்டும்.
- படைப்புகள் அனுப்ப கடைசி தேதி முடிந்த பின்னர், படைப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதிக கமெண்ட்டுகள், லைக் பெறும் படைப்புகளுக்கு தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.
- பரிசுக்குரிய படைப்புகளை பிரபல எழுத்தாளர்கள் தேர்வு செய்வார்கள்.
- முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000
- படைப்புகளை அனுப்ப கடைசி தேதி ஆகஸ்ட் 31,2020. படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@seithialai.com