ஆஸ்திரேலியாவில் கழிவறை துவாரத்திலிருந்து 2 மீட்டர் மலைப்பாம்பு வெளியேற்றப்பட்டது.
சிரியாவில் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் வீட்டில் குளியலறையில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நின்று வெளியேராமல் இருந்து கொண்டிருந்தது. இதனால் ஏதாவது அடைப்பு இருக்கும் என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிட்டார்கள். ஆனால் இதற்கு தீர்வு கிடைக்காததால் பிளம்பரை வரவழைத்து என்ன பிரச்சனை என்று பார்த்துள்ளார்கள் பிளம்பரும் எந்தவித பிரச்சினையும் இல்லை என்ற கூறியுள்ளார்.
மேலும் அந்த பிளம்பர் கழிவு நீர் செல்லும் துவாரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திடீரென துவாரத்தில் பளிச்சென்று இரு கண்கள் தெரிவதை பார்த்து துவாரத்தை
திறந்து உள்ளார்கள். அப்பொழுது 2 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று அந்தக் துவாரத்தில் வசித்து வந்தது தெரிந்தது . மலைப்பாம்பு கழிவறை துவாரத்திலிருந்ததினால் தான் கழிவுநீர் அவ்வப்போது வெளியேறாமல் இருந்திருக்கிறது.
இந்தப் மலைப்பாம்பு சாக்கடை நீர் வெளியேறும் வடிகால் வழியாக துவாரத்திற்குள் வந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர். இந்த மலைப்பாம்பை அந்த வீட்டில் வசித்து வரும் தம்பதியர்கள் மெதுவாக வெளியே எடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது. வீடியோவைப் பார்க்கும் ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியாவில் விலங்குகள் அதிகம் காணப்படுவதால் விலங்குகளுக்கு ஆஸ்திரேலியாவை விட்டுவிட்டு மக்கள் அனைவரும் வெளியேறுவதே சிறந்ததாகும் என்று கூறி வருகின்றனர்.