தி.மு.க.வின் நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு மாவட்டங்கள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டு, மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கழக நிர்வாக வசதிக்காகவும் – கழகப் பணிகள் சிறப்பாக நடைபெறவும் விழுப்புரம் தெற்கு(கள்ளக்குறிச்சி) மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் – சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் – ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி (தனி) இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் அடிப்படையில் கள்ளிக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு ஆகிய மாவட்ட கழகங்களாக செயல்படும்.
மாவட்ட பொறுப்பாளர்கள்
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.உதயசூரியன் எம்.எல்.ஏ.வும், பொறுப்புக்குழு உறுப்பினர்களாக விஜயகுமார், மணிக்கண்ணு, ஆசிர்வாதம், நடராஜன், கமுருதீன், ஜெயந்தி, நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வும், பொறுப்புக்குழு உறுப்பினர்களாக ராமமூர்த்தி, அமிர்தவள்ளி, மூக்கப்பன், காமராஜ், லியாகத் அலி, கென்னடி, சண்முகம், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.