தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பா தாவது.
கடந்த 2018-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் நகரங்களின் அடிப்படையில் நாட்டின் தலைநகரான டெல்லி முதல் இடமும், மும்பை 2-வது இடமும், காசியாபாத் 3-வது இடமும், கான்பூர் 4-வது இடமும் பிடித்து இருந்தது. பெங்களூரு 5-வது இடத்தில் இருந்தது.
இந்தநிலையில் கடந்த ஆண்டும் (2019) மீண்டும் டெல்லி (431) வழக்குகளுடன் முதல் இடத்திலும், (377) வழக்குகளுடன் மும்பை 2-வது இடத்திலும், (158) வழக்குகளுடன் பெங்களூரு 3-வது இடத்திலும், (117) வழக்குகளுடன் கான்பூர் 4-வது இடத்திலும், (115) வழக்குகளுடன் நாக்பூர் 5-வது இடத்திலும், (114) வழக்குகளுடன் காசியாபாத் 6-வது இடத்திலும், (110) வழக்குகளுடன் புனே 7-வது இடத்திலும், 103 வழக்குகளுடன் அகமதாபாத் 8-வது இடத்திலும், 83 வழக்குகளுடன் கொச்சி 9-வது இடத்திலும், 82 வழக்குகளுடன் இந்தூர் 10-வது இடத்திலும் உள்ளது.அதில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.