கோவையை சேர்ந்த மென்பொறியாளர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாய்ப்பாலை தானமாக வழங்கி வருகிறார்.
கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரூபா,திருவாரூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர்.இவர் செய்து வரும் தாய்ப்பால் தானம் கோவையிலுள்ள அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
எந்த திரவத்தையும் தாய்ப்பாலுடன் ஒப்பிட முடியாது.ஏனெனில் ஒரு தாய் தன் ரத்தத்தை குழந்தைக்கு பாலாக கொடுக்கிறாள்.அத்தகைய தாய்ப்பாலை ரூபா 2013-ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவமனையிலுள்ள ஒரு குழந்தைக்கு கொடுக்க ஆரம்பித்தார்.
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை, பெற்ற குழந்தைக்கு பாலூட்ட முடியாத தாய், ஊட்ட சத்து குறைபாடுள்ள சிசு என அனைவருக்கும் தாய்ப்பாலை தானமாக்கி பெரும் சேவையாற்றி வருகிறார் ரூபா.
ரூபா தானமாக கொடுக்கும் தாய்ப்பாலை சேகரித்து அதை முறையான டெம்பரேச்சரில் ஃபிரீஸரில் வைத்து கொள்வது வழக்கம். பிறகு தேவைப்படும் குழந்தைகளுக்கு தர பரிசோதனை செய்து வழங்கப்படும்.
இப்படி சேகரிக்கப்படும் தாய்ப்பால் ஓராண்டு வரை பயன்படுத்தபடும். ரூபாவின் இந்த சேவையால் இதுவரை எண்ணூறு லிட்டர் வரை தாய்ப்பால் தானமாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.