தமிழகத்தில் அனைத்து அதிமுக எம்.எல்ஏகளும் அக்டோபர் 6 ஆம் தேதி சென்னைக்கு வர அதிமுக தலைமை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் பல்வேறு குழப்பங்களுக்கும், போட்டிகளுக்கும் நடைபெற்று வரும் நிலையில் தான்,சென்னையில் அதிமுக தலைலை அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனிசாமி தெரிவிக்கையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பினை அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் அனைத்து அதிமுக எம்.எல்.ஏகளும் வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி சென்னைக்கு வர அதிமுக தலைமை கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலைப்பார்க்கும் போது நிச்சயம் அதிமுக கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் இருக்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.