தமிழகத்தில் பாஜகவினர் வேல் யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி வேல் துள்ளி வரும் என்ற கோஷத்துடன் பாஜகவினர் இன்று திட்டமிட்டபடி பயணத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக பிரத்யேகமாக அலங்கரிப்பட்ட வாகனத்தில் கையில் வேலுடன் காவி உடையில் திருத்தணி நோக்கி புறப்பட்டார் பாஜக தலைவர் எல்.முருகன்.
இதனால் சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் போலீசார் பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கணக்கில் அணி வகுத்து வந்த பாஜகவினரை போலீசார் பூந்தமல்லி அருகே தடுத்து நிறுத்தினர். ஆனால் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பாஜக தலைவர் எல்.முருகன் வாகன் உட்பட 5 வாகனங்கள் திருத்தணி நோக்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. கேட்டால் திருத்தணிக்கு சாமி கும்பிட செல்கிறேன், அதை தடுக்க யாராலும் முடியாது என்கிறார் எல்.முருகன்.
தற்போது திருத்தணியில் காலடி எடுத்து வைத்துள்ள எல்.முருகன் கையில் வேலுடன் முருகனை தரிசிக்க சென்றுள்ளார். சாமி கும்பிட தான் இவ்வளவு அக்கப்போர் என்றால் அதை சத்தம் இல்லாமல் செய்யலாமே? அதுக்கு என் கோர்ட்டில் கேஸ் போடனும், தமிழக அரசு ஏன் முதலில் அனுமதி இல்லைன்னு சொல்லனும், அப்புறம் ஏன் பாதி வழியில் அந்தர் பல்டி அடித்து அனுமதி கொடுக்கனும் என தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.