வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை, வணங்கி நினைவு கூர்கிறேன் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனை அறியாஹ்டர்வார்கள் தமிழ் மண்ணில் இருக்க முடியாது அப்படி அறியாதவர்கள் தமிழனாகவே இருக்க முடியாது. வீரத்திற்கு பேர் போனவர் இவர். வரி என்றாலே இவரின் பெயரும் இவர் வெளியனிடம் ஆற்றிய உரையும் தான் நினைவுக்கு வரும். ஆனால் உலகின் சிறந்த வீரர்களான இராவணன், மகாபலி, இன்னும் பல தமிழ் மன்னர்கள் போல இவரும் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 39 ஆண்டுகள் வாழ்ந்தார். எட்டப்பன், புதுக்கோட்டை மன்னன் போன்றோரின் துரோகத்தால் அவர் இறந்து 220 ஆண்டுகள் ஆகின்றன. துரோகத்தால் வீழ்வது தமிழனுக்கு புதிதல்லவே. அவரின் வரலாற்றை இன்று படித்தாலும் நரம்புகள் புடைத்தெழும்.
இந்நிலையில் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது”என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.