தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்திற்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், இரட்டை தலைமை உள்ள அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கடும் வார்த்தை போர் வெடித்தது தொண்டர்களை பதைபதைக்க வைத்தது.
இதையடுத்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர்.அதன்படி சரியாக 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக செய்தியாளரைக் சந்தித்தனர். முதற்கட்டமாக கடந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேர், ஈபிஸ் அணியின் 6 பேர் இடம்பெறுகின்றனர். இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி அறிவித்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கழக எஸ்.பி வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜர், பிரபாகரன், முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி, கோபால கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் வழிகாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்’’ என அவர் அறிவித்தார். இனி அதிமுகவை இவர்களே வழி நடத்த உள்ளனர்.