ருதுராஜ் மற்றும் டு பிளிசி அதிரடியால் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தீபக் ஹூடாவின் அதிரடி அரை சதத்தால் சென்னை அணிக்கு 154 ரன்கள் பஞ்சாப் அணி இலக்காக வழங்கியது.
154 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டு பிளிசி மற்றும் ருது ராஜ் சிறப்பான தொடக்கம் தந்தனர்.ஆரம்பம் முதல் அதிரடியை வெளிப்படுத்தி பாப் டு பிளசி ஒரு முனையில் அசத்த,மறுமுனையில் ருது ராஜ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டு பிளிசி ஜார்டன் வீசிய 10 வது ஓவரில் 48 ரன்களில் அவுட் ஆகி நடையைக்கட்டினார்,
ருது ராஜ் உடன் இணைந்த அம்பதி ராயுடு தட்டி கொடுக்க,மறுமுனையில் ருது ராஜ் வேகம் எடுத்தார்.15 ஓவர் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் பெற்று இருந்தது.ரவி பிஸ்னோய் வீசிய 16 வது ஓவரில் ருது ராஜ் அட்டகாசமாய் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து இந்த தொடரில் தொடர்ந்து 3 வது முறையாக அரை சதம் கடக்க,சென்னை அணிக்கு 24 பந்துகளில் 24 ரன்கள் தேவையாக இருந்தது.ஜார்டன் வீசிய அடுத்த ஓவரில் அம்பதி ராயுடு ஒரு பௌண்டரியை விரட்ட,அடுத்தடுத்து 2 பௌண்டரிகளை ருது ராஜ் அடித்து 7 பந்துகள் மீதம் வைத்து 154 ரன்களை எடுத்து சென்னை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணியில் ருதுராஜ் 62 ரன்களுடனும்,அம்பதி ராயுடு 30 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
சென்னை மற்றும் பஞ்சாப் அணி இதுவரை ஆடிய 14 போட்டிகளில் தலா 6 வெற்றி,8 தோல்விகளுடன் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியது.சென்னை அணி இதுவரை ஆடிய ஐ.பி.எல் தொடர்களில் இந்த முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.