ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட்போட்டி தற்போது யு.ஏ.இ நாட்டில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் 5 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. ஒவ்வொரு அணிகளும் 7 போட்டிகள் விளையாடியதும் தொடரின் பாதியை கடக்கும்.அப்போது ஆடும் லெவனில் இடம் பிடிக்க முடியாமல் வெளியில் இருக்கும் வீரர்கள் ஒரு அணியில் இருந்து மற்ற அணிகளுக்கு செல்ல மிட் சீசன் டிரான்ஸ்பர் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டது.
மிட் சீசன் டிரான்ஸ்பரில் ஒரு அணியில் இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடாத வீரரை மற்ற அணிகள் இரு அணிகளுக்கு இடையில் ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்ற விதி தற்போது வந்துள்ளது. கடந்த ஐ.பி.எல் சீசனில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த முறை பெரிதாக வெற்றி பெறவில்லை.
எனவே இந்த முறையை இந்த ஆண்டு பின்பற்றி அணி நிர்வாகங்கள் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுபோன்று விளையாட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 வீரர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 9 வீரர்களும் உள்ளனர். அதேபோல் டெல்லி அணியில் அஜிங்க்ய ரஹானே, கீமோ பால், அலெக்ஸ் கேரி உள்பட 11 பேர் உள்ளனர்.
மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 13 பேரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 10 பேரும், ராஜஸ்தான் அணியில் 12 பேரும், ஆர்சிபி அணியில் 10 பேரும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மிட்சீசன் சேஞ்ச் முறையில் வீரர்கள் மாறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளதாகத் தெரிகிறது.