ஆஸ்திரேலிய அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து IPL (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) போட்டியில் விளையாட இருந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒட்டுமொத்த IPL தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் IPL லீக் போன்ற சிறந்த தொடரில் இருந்து விலகுவது கடினமான ஒன்று என்றும் உலகின் தலைசிறந்த லீக்குகளில் ஒன்று IPL எனவும், எனக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் வீட்டில் சவால்கள் நிறைந்துள்ளன.
குழந்தை பிறக்கும் நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருக்கும் ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பவில்லை. அதனால் IPL போட்டியை தவற விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், இன்னொரு முறை IPL போட்டிக்கான வாய்ப்பு வரலாம். ஆனால் குழந்தை பிறக்கும்போது மனைவி அருகில் இருக்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கும் என உணர்ச்சி கரமாக கூறியுள்ளார். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா, மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா ஆகியோர் IPL போட்டியில் விலகியுள்ள நிலையில் இப்போது இவரும் விலகியுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.