குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் விழித்திரை தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாகலாம் என அகில இந்திய கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட விழித்திரை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்ட மாநாடு சென்னையில் நடைபெற்றது. அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மோகன் ராஜ், நாடு முழுவதும் 35 ஆயிரம் கண் மருத்துவர்கள் உள்ளனர். இதில் 2 ஆயிரம் பேர் மட்டுமே விழித்திரை சிகிச்சை நிபுணர்களாக இருப்பதாகத் தெரிவித்தார். நாடு முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 100 மில்லியன் நபர்களில் 20 மில்லியன் நபர்களுக்கு விழித்திரை பாதிப்பு உள்ளதாக குறிப்பிட்ட மோகன்ராஜ், குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் விழித்திரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.