தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 4,808 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 2.90 லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,481. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 31,55,619. நேற்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,553. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,90,907. நேற்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,883. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 986. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,75,744 பேர்/ பெண்கள் 1,15,136 பேர்/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர்.
தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,410 பேர். பெண்கள் 2,473 பேர். நேற்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,043 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,32,618 பேர். நேற்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 118 பேர் உயிரிழந்தனர். இதில் 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 81 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,808 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,290 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 109 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 9 பேர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்க 2,90,907 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக நோய் தொற்று விவரம்:
அரியலூர்-1,245, செங்கல்பட்டு – 17,411, சென்னை – 1,08,124, கோயம்புத்தூர் – 6,450, கடலூர் – 4,628, தருமபுரி – 851,திண்டுக்கல் – 3,747, ஈரோடு – 1,012, கள்ளக்குறிச்சி – 4,394, காஞ்சிபுரம் – 11,422, கன்னியாகுமரி – 6,222, கரூர் – 738, கிருஷ்ணகிரி – 1,361, மதுரை – 11,898, நாகப்பட்டினம் – 1,076, நாமக்கல் – 953, நீலகிரி – 948, பெரம்பலூர்- 686, புதுகோட்டை – 3,050, ராமநாதபுரம் – 3,585, ராணிப்பேட்டை – 6,744, சேலம் – 4,458, சிவகங்கை – 2,887, தென்காசி – 2,952, தஞ்சாவூர் – 3,934, தேனி – 7,538, திருப்பத்தூர் – 1,552, திருவள்ளூர் – 16,612, திருவண்ணாமலை – 7,610, திருவாரூர் – 1,947, தூத்துக்குடி – 8,905, திருநெல்வேலி – 6,425, திருப்பூர் – 1,106, திருச்சி – 5,032, வேலூர் – 7,206, விழுப்புரம் – 4,463, விருதுநகர் – 9,773, விமான நிலையத்தில் தனிமை – 853, உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை – 683, ரயில் நிலையத்தில் தனிமை – 426, மொத்த எண்ணிக்கை – 2,90,907.




