சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மற்றும் நாளை பொதுமக்கள் பயணிக்க 50 % தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை :
இந்தியாவில் தென் பகுதிகளில் தெலுங்கு மற்றும் கன்னடர்கள் இன்று யுகாதி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அதேபோல், நாளை தமிழ் புத்தாண்டு தமிழர்களால் கொண்டப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்த பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக சென்னை மெட்ரோ நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
Read more – வேகமெடுக்கும் மேற்கு வங்க தேர்தல்.. மம்தா பானர்ஜிக்கு தடை.. தடையை உடைக்க தர்ணா..
அதன்படி, யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும், நாளையும் பொதுமக்கள் பயண சலுகையாக கட்டணத்தில் 50 % தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும், இந்த சலுகையானது இனி வரும் காலங்களில் அனைத்து ஞாயிற்று கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களுக்கும் பொருந்தும் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.