அறிஞர் அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை மற்றும் மாநில சுயாட்சி தீர்மானங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி தீர்மானங்களை இந்தப் பேரவையில் நிறைவேற்றியவர் அறிஞர் அண்ணா.அன்று தொடங்கிய இந்த 2 தீர்மானங்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியை காக்க அண்ணா பிறந்தநாளில் உறுதியேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்