பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல்ஆய்வாளர் மகேஸ்வரின் தந்தை உயிரிழந்த போதும், அவர் சுதந்திர தின காவல்துறை அணிவகுப்பினை தலைமையேற்று நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை- மகள் பாசத்தினை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யாராலும் எந்த சூழலிலும் அவர்களுக்கு இடையேயான உறவினை பிரிக்க முடியாது. தந்தையின் பிரிவினையும் எந்த பெண்ணாலும் தாங்கவே முடியாது. ஆனால் பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணி வந்த மகேஸ்வரி, இவரது தந்தை நாராயணசாமி இறந்த விட்டார் என்ற செய்தி கேட்டும் அவரால் உடனடியாக இறுதி சடங்கிற்கு செல்ல முடியாது நிலை.
ஆம், 74 வது சுதந்திர தின காவல்துறை அணிவகுப்பில் தலைமையேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை. கடைசி நேரம் என்பதால் ஏற்கனவே இதற்காக தயார்ப்படுத்தி வைத்தமையை மாற்றினால் நிச்சயம் குளறுபடி ஏற்படும். இதன் காரணமாக நாட்டின் மீது பற்றுக்கொண்ட இந்த பெண் காவல் ஆய்வாளர், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்ததையடுத்து, காவல்துறை அணிவகுப்பினை சிறப்பாக நடத்தி வைத்தார்.
தந்தை இறப்பின் சோகத்தினை ஒரு போதும் கண்களில் காட்டாமல், கம்பீரமாக அணிவகுப்பினை முன்னின்று நடத்திய பெண் காவல் ஆய்வாளர் மகேஸ்வரின் இச்செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உள்மனத்தில் சோகத்தில் இருந்த மகேஸ்வரி விழா முடிவுந்த அடுத்த நிமிடமே தந்தையின் இறப்பிற்காக நெல்லையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு விரைந்து சென்றார்.