இனி எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தான் காரணம் என்று கருத்து பரவிய நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more – ஸ்டாலின் முதல்வர் கனவு கடைசி வரை கனவு தான்… அது ஒருபோதும் ஆகாது நனவு… எல்.முருகன் விமர்சனம்
இந்தநிலையில், கிரண்பேடி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன். புதுச்சேரி மாநிலத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அது தற்போது மக்கள் கையில் உள்ளது. தனக்குத் துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.