மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களை விசாரித்த நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு நாளும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பாக 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது. மணல் கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என நீதிபதி காட்டமாகக் குறிப்பிட்டார்.
முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது என குற்றம்சாட்டிய நீதிபதி, 40 ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.