அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்தில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
![Missouri paid SLSCO $25M to aid hospitals during COVID surge | STLPR](https://i0.wp.com/npr.brightspotcdn.com/38/fc/f9fba7e642898691ea97e7084634/5fc1ac9e592f9.image_.jpeg?ssl=1)
தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராபர்ட் எடிசன் (50). இவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஸ்டச்சரில் வைத்து தள்ளிச் சென்றுள்ளார்.அப்போது, பாதி மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார். சுதாரித்துக் கொண்ட எடிசன் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், எடிசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.