பிரபல தொழிலதிபரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் காங்கிரஸ் எம் பி யான வசந்தகுமார் நேற்று மாலை சென்னை தனியார் மருத்துவமனையில் அகால மரணமடைந்தார்.
தமிழக காங்கிரஸின் கட்சி தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர் H. வசந்தகுமார். இவர் கடந்த பத்தாம் தேதி கொரோனா தொற்று காரணாமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது, இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அன்னாரின் பிரிவிற்கு பல அரசியில் தலைவர்களும் திரை பிரபலங்களும் கனத்த இதயங்களோடு இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் மருத்துவமனையில் இருந்து தி. நகர் நடேசன் பார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு பொது ம க்களும் வசந்த்& கோ ஊழியர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காலை பத்து மணியளவில் அவரது உடல் சத்யமூர்த்தி பவனுக்கு கொண்டு சென்று அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகதீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை காலை பத்து மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனை.
“தோன்றின் புகழோடு தோன்றுக” என்னும் வாக்கிற்கிணங்க வாழ்ந்து மறந்த வசந்தகுமாரின் நினைவுகள் பார் உள்ள வரை நீங்காது.