தமிழக அமைச்சர்களின் 2 வது ஊழல் பட்டியல் தயாராகிவிட்டது என்றும், விரைவில் ஆளுநரிடம் சேர்ப்போம் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர்:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், கரூர் மாவட்டம் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது :
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படும் .இளைஞர்களின் வேலை இல்லா திண்டாட்டம், விவசாயிகளை புறக்கணிக்கும் ஆட்சியாக இந்த அதிமுக அரசு இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
Read more – தமிழகம் முழுவதும் ரூ.2500 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு : ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகம்
அதனைத்தொடர்ந்து, அதிமுக அமைச்சர்களின் ஊழல் தொடர்பான இரண்டாவது பட்டியலை திமுக தயார் செய்து விட்டது.விரைவில் தமிழக அமைச்சர்களின் இந்த ஊழல் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.