ஆப் ஸ்டோரில் இருந்து சில செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது சீன ஆப் ஸ்டோரில் இருந்து திடீரென 39 ஆயிரம் கேம் செயலிகளை நீக்கியுள்ளது பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்திருக்கிறது.
உரிமம் பெறாத காரணத்தால் இந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெவலப்பர்கள் சீன ஆப் ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்து முறையான அனுமதி பெற ஏற்கனவே, சீனா காலக்கெடு விதித்திருந்த நிலையில் அதனை பின்பற்றி முறையான அனுமதி பெறாததால் ஒரே நாளில் 39 ஆயிரம் செயலிகளை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.
READ MORE- சியோமியின் முதல் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை!
ஆப்பிள் வரலாற்றில் முதன் முறையாக இத்தனை ஆயிரம் கேம் செயலிகளை நீக்கியுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் மொத்தமாக நீக்கியுள்ள 46 ஆயிரம் செயலிகளில் 39 ஆயிரம் செயலிகள் கேம் செயலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.