மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தமிழக அரசே இனி பராமரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை :
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்திய தமிழக அரசின் உத்தரவை மீறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் வழக்கு பதிவு செய்தார்.
இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அனைத்து சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், வீடு தற்போதுமனுதாரர்களின் வசம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், நினைவுகளை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றப்படுவதாகவும், வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
Read more – 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் காலடி தடம் : 4 வயது குழந்தை கண்டுபிடித்த அதிசயம்
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த சேஷசாயி, தமிழக அரசு திட்டமிட்டபடி வேதா நிலையத்தை திறக்கலாம் எனவும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும், போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த இலத்திற்குள் யாரும் நுழைய கூடாது என்று தெரிவித்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக்கொள்ளலாம் எனக் கூறி, சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்ததுடன் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவித்து உத்தரவிட்டார்.