மக்களுக்கு இடைஞ்சலான சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகள்
தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி இன்று தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
அகற்றும்வரை போராட்டம்
சட்ட விதிகளை மீறி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தைக் காட்டுகிறது. மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுங்கச்சாவடிகளை அகற்றும்வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்