கொங்கு மண்டலத்தில் அதிமுகவை குழி தோண்டி புதைப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவையில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரை வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை கொடிசியா அருகேயுள்ள மைதானத்தில் நடைபெற்ற பரப்புரையின் போது மக்களின் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய அவர்,
சுண்ணாம்பு பவுடர், பினாயில் வாங்கியதில் ஊழல் செய்தவர் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்று குற்றஞ்சாட்டினார். ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி வீதம், 12 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து இருப்பதாகவும் புகார் கூறினார்.
Read more – கூட்டுறவு வங்கி கடன் சாத்தியமா ? சத்தியமாக முடியாது என்று மறுக்கும் கார்த்திக் சிதம்பரம்
அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டதாக விமர்சித்த ஸ்டாலின், கருணாநிதி மறைந்த போது அவரை அடக்கம் செய்ய 6 அடி குழி கொடுக்காத இந்த ஆட்சியை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை அழ குழிதோண்டி புதைத்து திமுகவை வெற்றி பெற செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.