நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மரங்களை வெட்டுபவர் மீது குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
Read more – அமைச்சர் கடம்பூர் ராஜு காருக்கு அடியில் பட்டாசு வைத்த அமமுகவினர்… கோவில்பட்டியில் வெடித்த சரவெடி…
இந்தநிலையில், நாம் தமிழர் ஆட்சியில் மரங்களை வெட்டுபவர் மீது குற்றமென அறிவித்து அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது;
மனிதர்களைக் கொலை செய்வது குற்றம்போல, மரங்களை வெட்டுவதும் குற்றமென அறிவித்துக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்! மரங்கள் இல்லையேல் மனிதர்கள் இல்லை! என்று பதிவிட்டிருந்தார்.