சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் செய்யப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது. அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் தேதி சமைத்து சாப்பிட்டு உள்ளனர்.
இதில் 9 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
சூடோமோனாஸ் கோகோவெனான்கள் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் சுவாச நச்சுத்தொகையான போங்க்ரெக்கிக் அமிலத்தின் அதிக செறிவு சோள நூடுல்ஸிலும், நோய்வாய்ப்பட்டவர்களின் இரைப்பை திரவத்திலும் கண்டறியப்பட்டதாக மாகாண சுகாதார ஆணையம் அக்டோபர் 12 அன்று தெரிவித்துள்ளது.
போங்க்ரெக்கிக் அமிலத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும்.
ஆனால், சம்பவத்தன்று, அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும் எனவும், அது சீனாவில் அடிக்கடி நடப்பது தான் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.