கொரோனா நிவாரண நிதிக்கு அதிபர் டிரம்ப் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன் :
உலக அளவில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.கொரோனா பாதிப்பின் நிவாரணத்துக்காக அந்நாட்டு நாடாளுமன்றம் 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்தது. மேலும்,நாடாளுமன்றத்தில் இந்த நிவாரணம் தொடர்பாக இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மசோதாவினால் அமெரிக்கர்களுக்கு குறைந்த அளவு உதவியே கிடைத்துள்ளது.இதனால் வெளிநாடுகளே அதிக லாபம் அடைவார்கள் எனக்கூறி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். மேலும், அமெரிக்கர்களுக்கு தலா 600 டாலரில் இருந்து 2 ஆயிரம் டாலராக உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளதால் கொரோனா நிவாரண நிதி வழங்க காலதாமதம் ஆகி வருகிறது.
Read more – தள்ளுவண்டி கடைகளில் இனி வாழை இலைதான் பயன்படுத்த வேண்டும் : உணவு பாதுகாப்புத்துறை
இதையடுத்து அடுத்த மாதம் ஜனவரியில் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்கவுள்ள ஜோ பைடன், டிரம்ப் உடனடியாக அந்த மசோதாவில் கையெழுத்து இட வேண்டும்.அவ்வாறு இல்லையென்றால் 1 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காப்பீடு பலன்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்