மாரடைப்பு காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது. லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் கண்டறியப்படவில்லை. மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவர் நலமாக இருப்பதாக பாகிஸ்தான் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் நலம்பெற வேண்டி கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.