இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம்:
இலங்கை உள்நாட்டின் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் இன மக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 2019 ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்த நினைவிடம் கடந்த 2018 ம் ஆண்டு கட்டுமான பணிகளை தொடங்கும் போதே இலங்கை உயர்கல்வி அமைச்சரகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தடுக்கப்பட்டது. எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடம் தொடர்ந்து மாணவர்களின் தலையீடுகளால் கட்டுமான பணி முடிக்கப்பட்டு, நினைவேந்தலும் நடத்தப்பட்டது.
Read more – மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் தீ விபத்து : 10 பச்சிளம் குழந்தைகள் பலி
இந்தநிலையில், 2 ஆண்டுகளும் பிறகு ராஜபக்சே சகோதர்களின் உத்தரவால் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் திரள, சிங்கள ராணுவம் மற்றும் காவல் துறையினரின் கூட்டத்தை கலைக்க தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருமாவளவன், பல தேசிய கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.