கள்ளக்காதல் ஆசையால் 4 வயது மகனை கொலை செய்த தாய்… நடந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சிவானந்தம் ராணுவ வீரரான இவருக்கு வனிதா என்ற மனைவியும் 4 வயதில் நந்தீஸ்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் வனிதாவுக்கு இளையான்குடியை சேர்ந்த கார் டிரைவரான சிவகார்திக் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சிறுவன் நந்தீசகுமாருடன் ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு நந்தீஸ்குமார் இடையையூறாக இருந்ததால் வனிதா மற்றும் சிவகார்த்திக் அடிக்கடி சிறுவனை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு நந்தீஸ்குமார் இவர்கள் இரண்டு பேரும் தாக்கியதால் படுகாயமடைந்த சிறுவனை தூக்கி கொண்டு ஊருக்கு சென்று வருகிறோம் என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு கிருஷ்ணகிரி சென்றுள்ளனர். அப்போது ஊர் திரும்பும் வழியிலேயே நந்தீஸ்குமார் இறந்து விட கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மலையடிவாரத்திற்கு சிறுவன் நந்தீசகுமாரின் சடலத்தை எடுத்து சென்று வனிதாவும் சிவகார்த்திக்கும் புதைத்துவிட்டு மீண்டும் திருப்பதிக்கும் திரும்பியுள்ளனர்.
குழந்தை இல்லாமல் வந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர் குழந்தை பற்றி விசாரிக்க உடல் நிலை சரியில்லாததால் ஊரிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அவர்கள் கூறிருக்கிறார்கள். சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் போலீசார் 2 பேரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை அடித்து கொன்ற ஓப்புகொண்டுள்ளனர்.சிறுவனின் சடலத்தை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கின் விசாரணை நேற்று நடந்த நிலையில், காதலனுடன் சேர்ந்த மகனை அடித்து கொலை செய்த வனிதாவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.




