பிஎம்டபிள்யூ நிறுவனம் தான் விற்பனை செய்த சுமார் 9 ஆயிரம் பைக்குகளை திரும்ப பெற இருப்பதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பயணத்தை வழங்குவதை இலக்காக கொண்டு செயல்படும் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது பிஎம்டபிள்யூ காரை தொடர்ந்து, பைக் மாடல்களில் தனது தரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பிஎம்டபிள்யூ மோட்டார் நிறுவனம் அமெரிக்காவில் 9392 பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மாடல் பைக்குகளின் பிரேக்கிங் பாகங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதே ரீகால் செய்வதற்கான காரணம் என கூறப்படுகிறது. இந்த ரீகால் நடைமுறை வரு அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இதில், 2019 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட R1250GS, R1250GS அட்வென்ச்சர், R1250RD, S1000RR மற்றும் S1000XR என ஐந்து மாடல்கள் அடங்கும்.
ரீகால் செய்யப்படும் பைக்குகளில் முன்புற பிரேக் கேலிப்பர் பார்க் செய்யப்பட்ட நிலையில், பிரேக் ஃபுளூயிட்டை லீக் செய்யலாம் என கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பிரேக்குகள் சீராக இயங்காமல் போகும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பித்த இந்த பிரச்சனையை சரி செய்ய பிஎம்டபிள்யூ மோட்ட்டார் நிறுவனம் ஆய்வு செய்து முன்புற பிரேக் கேலிப்பரை இலவசமாக மாற்றி தர முடிவு செய்துள்ளது. இதற்காக தனிப்பட்ட கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ரீகால் செய்வது பற்றி பிஎம்டபிள்யூ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.