இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம் இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி, நடிகை அஞ்சலி, சிறுமி, சாதனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருந்த படம் ‘பேரன்பு’. இந்தப் படத்துக்குப் பின், நடிப்பில் கவனம் செலுத்திய ராம், படங்கள் இயக்காமல் இருந்தார். அப்படி, கடைசியாக மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் அவர். ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட ‘பேரன்பு’ படத்தில், கேரளாவை சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ராம், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். தனது பட வேலைகளை தொடங்கிவிட்ட ராம், ‘பேரன்பை’ போலவே, தனது இந்தப் படத்திலும், மலையாள ஹீரோவுடன்தான் இணைய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த முறை நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்குநர் ராம் படம் எடுக்க இருக்கிறார் என்று தமிழ் திரைத்துறையின் பி.ஆர்.ஓ நிகில் முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
Read more : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணி சகோதரியை தீர்த்துக்கட்டிய தங்கை…!!
இத்திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அந்த அறிவிப்பில், படத்தில் வேறு யாரெல்லாம் இணைகிறார்கள் என்ற விவரம் வெளியாகுமாம். தமிழில், நிவின் பாலி கடைசியாக ‘ரிச்சி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.