டெல்லியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவன், நன்னடத்தை விதிகளின் கீழ் சிறையில் இருந்து விடுக்கப்பட்டவன் என தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு டெல்லி பகுதியில் கடந்த செவ்வாயன்று 12 வயது சிறுமி தனது வீட்டில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிறுமியின் உடல்நிலை குறித்து விசாரித்ததோடு குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 33 வயதான கிருஷ்ணா என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி வீட்டிற்குள் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் சென்று சிறுமியை கெடுக்க முயன்றுள்ளான். சிறுமி எவ்வளவோ போராடிய நிலையில், இறுதியில் அந்த நபர் வீட்டில் இருந்த தையல் மெஷினை கொண்டு சிறுமியை தாக்கி விட்டு, ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். தொடர்ந்து கத்திரிக்கோலால் சிறுமியை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிக் சென்றுள்ளான்
முன்னதாக இந்த குற்றவாளி 2006ம் ஆண்டு டெல்லியின் சுல்தான்புரியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளான் .பிறகு அவனை சிறையில் நன்னடத்தை விதியின் கீழ் வெளியே அனுப்பியுள்ளனர் . பிறகு வெளியே வந்த அவனை, அவரின் வீட்டினர் சேர்க்காததால் அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார் .அதற்கு பிறகும் ஒரு திருட்டு வழக்கில் உள்ளே போய் வெளியே வந்த நிலையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.