பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடுமுழுவதும் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு மத்திய அரசு புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற்று புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.
மேலும், கள்ள நோட்டுகளை தடுக்கும் வழிமுறையாக பழைய வரிசை எண் கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்று புதிய வரிசை நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி சார்பில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று தகவல் பரவியது.
Read more – இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்து : ராணுவ அதிகாரிகள் கடும் கண்டனம்
தற்போது இதுகுறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், பழைய வரிசை 5, 10, 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் திரும்பப்பெறப்பட உள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் முற்றிலும் தவறானது. அப்படி ஒரு எந்த திட்டமும் தற்போது இல்லை என்று ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
மேலும், மத்திய அரசின் பத்திரிகை தகவல் பிரிவும் இந்த பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் தகவலை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.