ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.
பீகார் உட்பட பல மாநில தேர்தல் முடிவுகள் வெளியான சமயங்களில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மத்தியில் ஆளும் பாஜக முறைகேடு செய்து வென்றதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தது. ஆனால், வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் கூட, பாஜக ஏறுமுகத்தையும், காங்கிரஸ் மிக மோசமான தோல்வியையுமே பதிவு செய்துள்ளது.
மொத்தமுள்ள 150 வார்டுகளில் டிஆர்எஸ் 71, ஓவைசி கட்சி 43 மற்றும் பாஜக 34 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆனால், காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆனால் அதுவும் எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற அளவில்தான் உள்ளது. அதேசமயம், பாஜக கடந்த மாநகராட்சி தேர்தலில் வெறும் 4 வார்டுகளை மட்டுமே கைப்பற்றிய நிலையில், தற்போது இந்த அளவுக்கு பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
களத்தில் பாஜக தீவிரமாக உழைத்தன் காரணமாகவே மட்டுமே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. வெறும் மாநகராட்சி தேர்தல் என்று பார்க்காமல் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் என பல பிரச்சார பீரங்கிகளை அக்கட்சி களமிறக்கியது. ஆனால், காங்கிரஸ் வழக்கம்போல குறட்டைதான் விட்டது. ஆக்ரோஷமே காட்டவில்லை.
எனவே இனியும் காரணத்தைச் சொல்லி, காலத்தை வீணாக்காமல், காரியத்தில் காங்கிரஸ் கண்ணாக இருக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கூட்டணியிலுள்ள கட்சிகளும் எதிர்பார்க்கின்றன.