மு.க.ஸ்டாலினின் விடியலை நோக்கி பயணம் 75 நாட்கள், 15 ஆயிரம் கி.மீ. பயணம் மற்றும் 1500க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களை கொண்டதாக நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக. தி.மு.க. சார்பில் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பி்ல் கூறியிருப்பதாவது:-

விடியலை நோக்கி
தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரச்சாரப் பயணத்தை, கட்சியின் சேர்ந்த 15 முன்னணியினர், ஸ்டாலினின் தூதுவர்களாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 75 நாட்கள், 15 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 1,500-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடுவார்கள்.
232 நிகழ்ச்சிகள்
இதுவரை கடந்த 11 நாட்களில், ஏழு கழக முன்னணியினர் 2099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 கழக மாவட்டங்களிலுள்ள 41 தொகுதிகளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




