தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரையில் இன்று நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, அந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
குடிமராமத்து
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஒரு வாரத்தில் 30 நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஆரூடம் சொல்லி வந்தார். ஆனால், 5 ஆண்டுகள் முழுமையாக அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது.
ஏரி, குளங்களை குடிமராமத்து திட்டம் மூலம் தூர்வாரப்பட்டதால் தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு கூட அவை நிரம்ப ஆரம்பித்துள்ளது. மதுரைக்கு கிள்ளிக்கொடுக்காமல் முதலமைச்சர் அளிக்கொடுத்துள்ளார்.
ஒன்றும் செய்ய முடியாது
தமிழகத்தில் யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கட்டும். அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. இந்த கட்சி எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட சாமானியர்களின் கட்சி. தொடர்ந்து வென்று காட்டும்,
இவ்வாறு அவர் பேசினார்.