நாடாளுமன்றத்தில் அண்ணா கேள்வி !
இந்தியாவின் தேசிய மொழி எது?
கேள்விக்கு பதில் இந்தி என்று வந்தது
அறிஞர் அண்ணா : ஏன்? இந்தியை வைத்தார்கள் ?
இந்திதான் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்றார்கள்.
அறிஞர் அண்ணா : இந்தியாவின் தேசிய பறவை எது ?
மயில் என்று பதில் வந்தது. அறிஞர் அண்ணா : மயில் இனம் இந்தியாவில் குறைவு, இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காகம் அந்த காகத்தை தேசிய பறவையாக வைக்க வேண்டியது தானே?
யாரும் வாய் திறக்கவில்லை. எது வேண்டும் வேண்டாம் என்பது எங்களுக்கு தெரியும்.
இந்தி தெரிந்தால் நாடு முன்னேறும் என்றால், ஏன் பீகார், ஒடிசா ,,இன்னும் சொல்லி கொண்டே போகலாம். இந்தி பேச தெரிந்த இவர்கள் வாழ்க்கை தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை ? யாரும் வாய் திறக்கவில்லை. கடைசி தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது. சவாலாக சொல்கிறேன். தமிழன் என்று மார்தட்டி சொல்கிறேன்!!
உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. எங்கள் உயிருடன், வாழ்வுடன் கலந்த மொழி தமிழ் மொழி, அந்த தமிழ் மொழி மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும்வரை நான் அமைதி பெறமாட்டேன், திருப்தி அடைய மாட்டேன்.
நான் தமிழுக்காக வாதாடுகிறேன். அதற்காக இந்திக்காக வாதாடுபவர்களின் தாய்மொழிப் பற்றை நான் மறுக்கவில்லை. அவர்கள் இந்திக்காகப் பாடுபடட்டும்.