வாய்மேடு பகுதியை சேர்ந்த மாணவி சபிதா, அடகு வைத்திருந்த தனது நகையை மீட்டுத் தராததாலும், பள்ளிக்குச் செல்வதற்கு ஸ்கூட்டர் வாங்கித் தராததாலும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பெருமைக்கோன்காடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது 15 வயது மகள் சபிதா, ஆயக்காரன்புலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சபிதா சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையிடம், அடகு வைத்திருந்த தனது நகையை மீட்டுத் தரவேண்டும் என்றும், மேலும் பள்ளிக்குச் செல்வதற்கு ஸ்கூட்டர் வாங்கித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
சபிதாவின் தந்தை குணசேகரன் பின்னர் வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி சபீதா விஷத்தைக் குடித்தார். அவரை மீட்டப் பெற்றோர், சபிதாவை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சபிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி சபிதா ஸ்கூட்டர் வாங்கித் தராததாலும், அடகு வைத்திருந்த தனது நகையை மீட்டுத் தராததாலும், தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பிள்ளைகளை குறித்தப் பயத்தையும் அதிகரித்துள்ளது.