தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மூன்று மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை :
தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மூன்று மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை செயலாளர்:
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக கடந்தாண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி சண்முகம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூலை மாதமே நிறைவடைந்தது. .ஆனால், கொரோனா சூழல் காரணமாக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.
பதவிக்காலம் நீட்டிப்பு :
இந்த நிலையில், அவரது பதவிக்காலம் வரும் 31-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில் மீண்டும் தமிழக அரசு கோரிக்கை அடிப்படையில் மீண்டும் அவரது பணியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி அக்டோபர்-31 அன்று ஓய்வுபெற உள்ள நிலையில் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி .31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.