பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதேபோல், இன்று பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமும், தனிமனித இடைவெளி மற்றும் பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் தலா 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Read more – சென்னையில் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க கூடுதலாக 400 பேருந்துகள் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு
அதேபோல், வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதமும், தொடந்து 2 முறைக்கு மேல் விதிகளை மீறும் வளாகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தனிமைப்படுத்தி கொள்ளும் விதிமுறைகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.