ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிருபர் சுப்பிரமணி என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
திருப்பதி திருமலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பதியில் உள்ள கோவிட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.