அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா மீதான நிதி முறை கேடு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாஷிங்டன்:
2017 ல் அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது சுமார் ரூ.790 கோடி நிதி திரட்டப்பட்டது.அந்த நிதியின் குறிப்பிட்ட தொகை டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தவறாக பயன்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.மேலும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப்க்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது.அரசு நடத்தும் முக்கிய கூட்டங்களை டிரம்ப் தனது சொந்த லாபத்திற்காக அந்த ஓட்டலில் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
அந்த ஓட்டலை நிர்வகித்து வந்த டிரம்பின் மகள் இவான்கா கணக்கில்,இந்த நிகழ்ச்சி நடந்ததற்காக சுமார் ரூ.22.14 லட்சம் தொகைக்கும் அதிகமாக பெற்றுள்ளதாக ஆதாரங்கள் சிக்கியுள்ளது.இதனால் ரூ. 7.38 கோடி அளவுக்கு டிரம்பின் குடும்ப தொழில்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும்,பொதுமக்களிடம் இருந்து திரட்டபட்ட நிதி அதிபரின் மகள் இவான்கா தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வரும் சூழலில்,2020 ல் நடந்த அதிபர் தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது என்று எந்த ஆதாரவும் இன்றி டிரம்ப் தரப்பு தொடர்ந்து வழக்குத் தொடுப்பதும்,நீதிமன்றங்கள் அதை நிராகரிப்பதும் அமெரிக்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.