ஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை தந்தண்டனை அறிவித்தனர்.
சேலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கில் வனத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டது. சேலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் என்பவர். இவர் மேட்டூர் வனச்சரகத்தில் ரேஞ்சராக கடந்த ௨௦௦௪ல் பணிபுரிந்து வந்தார்.
அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.26 லட்சத்துக்கு சொத்து வாங்கியுள்ளார். அதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது வழக்கு தொடர்ந்தனர். தற்போது இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து ரேஞ்சர் மோகன், அவரது மனைவி சித்ராமணி ஆகியோர் மீதான இந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மேலும் கடந்த 14 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நீதிபதி ஜெயந்தி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். இவர் ஓய்வு பெற்ற ரேஞ்சர் மோகனுக்கும் பின்னர் அவரது மனைவி சித்ராமணிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்ததோடு, சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.