மோர்கனின் இறுதி நேர போராட்டத்தால் ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக கொல்கத்தா அணி வழங்கியது.
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் திரிபாதி களம் இறங்கினர்.ஆரம்பம் முதல் அடித்து ஆடிய திரிபாதி(23 ரன்கள்,16 பந்துகள்) நடராஜன் வீசிய 6 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆகி நடையை கட்டினார்.கில்லுடன் இணைந்த ராணாவும் அதிரடியை வெளிப்படுத்தி அசத்த,ரஷித் கான் வீசிய 12 வது ஓவரில் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த சுப்மன் கில்(36 ரன்கள்,37 பந்துகள்) பிரியம் கார்க்கின் அசத்தலான கேட்ச்சால் வெளியேறினார்
.12 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து இருந்தது.விஜய் சங்கர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தே ராணாவும்(29 ரன்கள்,20 பந்துகள்) கார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேற,அடுத்த வந்த மோர்கன் நடராஜன் வீசிய 15 வது ஓவரில் ஒரு பௌண்டரி அடித்து கொல்கத்தா அணி 100 ரன்களை கடக்க உதவி செய்தார்.அதே ஓவரில் நடராஜன் புதிதாக களம் இறங்கிய ரசலை 9 ரன்களில் வெளியேற்ற,18 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
நடராஜன் வீசிய 19 வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் பறக்க விட,கடைசி ஓவரில் கேப்டன் மோர்கன்(34 ரன்கள்,23 பந்துகள்) தன் பங்கிற்கு ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸரை தெறிக்கவிட்டு கடைசி பந்தில் அவுட் ஆனார்.20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக வழங்கியது.
கொல்கத்தா அணி சார்பில் தினேஷ் கார்த்திக் 29 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
ஹைதராபாத் அணியில் நடராஜன் அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்து இருந்தார்.